‘செம்பருத்தி’ ஷபானாவுடனான திருமணத்திற்கு பின்பு ஆர்யன் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்யன், நடிகை ஷாபனாவை திருமணம் செய்து கொண்ட பிற்பாடு முதன் முதலாக இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் ஆர்யன்
சமீபத்தில் தமிழ் சின்னத்திரையின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு நட்சத்திர காதல் ஜோடியின் திருமணம் என்றால் அது நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷாபனாவுடையது தான். விஜய் டிவியை சேர்ந்த நடிகர் ஆர்யன் மற்றும் ஜீ தமிழ் டிவியை சேர்ந்த நடிகை ஷபானாவின் காதல் கதை இதுவரை ஒருவரும் அறிந்திராத ரகசியமாக இருந்து வருகிறது. என்றாலும் இந்த அழகான காதல் ஜோடி, கடந்த மாதம் 11ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர்.
TCS அறிமுகம் செய்த சூப்பர் திட்டம் – இலவச டிஜிட்டல் சான்றிதழ்!
இப்படி இருக்க சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஷபானா தனது திருமணத்திற்கு முன்பு, திருமணத்துக்கு பிறகு என ஆர்யனுடன் சேர்ந்து இருக்கும் சில புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார். அதே போல நடிகை ஷபானா வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும், பதிவும் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருமணமாகி ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், நடிகர் ஆர்யன் நடிகை ஷபானா குறித்த எவ்வித பதிவையும் வலைதளங்களில் ஷேர் செய்யவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை தணிக்கும் விதமாக நடிகர் ஆர்யன், நடிகை ஷாபனாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, ‘டியர் பொண்டாட்டியே, எனக்கு காதல் என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறது என்றால் அது உன்னால் தான்’ என்று அழகான கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு, நீங்கள் தான் என்னுடைய ஆசீர்வாதம் என்று கமெண்ட் பக்கத்தில் பதில் சொல்லி இருக்கிறார் ஷபானா. இவர்களின் இந்த இன்ஸ்டா காதலை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.