‘செம்பருத்தி’ ஷபானா, நடிகர் ஆர்யனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு? ரசிகர்கள் ஷாக்!
எதிர்பாராதவிதமாக நடைபெற்ற சின்னத்திரை நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யனின் திருமணத்தின் உண்மை நிலவரம் குறித்து ஏற்கனவே பல சந்தேகங்கள் இருந்து வரும் வேளையில், இவர்கள் இருவருக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை திருமணம்
தமிழ் சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யன் இருவரும் கடந்த மாதம் 11ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகர் ஆர்யன் மற்றும் ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் இருவரும் எப்போது சந்தித்தார்கள், எப்படி காதலில் விழுந்தார்கள் என்பதெல்லாம் இன்று வரை புரியாத புதிராக இருந்து வர இவர்களின் திடீர் திருமணமும் ரசிகர்களிடம் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சூட்டிங்கில் தூங்கும் இனியா – எழில் பதிவிட்ட போட்டோ!
அதாவது வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் நடிகர் ஆர்யன் வீட்டாரின் சம்மதத்துடன் தான் நடைபெற்றது என்றும் ஷாபனாவின் குடும்பத்தாருக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்றும் இதுவரை சொல்லப்பட்டு வந்தது. அதுவும் நடிகர் ஆர்யனின் இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் ஷபானா சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியானது.
ஏற்கனவே இந்து பையனுடன் நடிப்பதற்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த நடிகை ஷபானாவின் இந்து பையனுடனான திருமணம் அவரது வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது திருமணத்திற்கு பிறகு ஷபானா, ஆர்யனின் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் தேனிலவு கொண்டாட்டத்தில் இருந்தும் அவர்கள் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சில தகவல்கள் வலைதளங்களில் பரவி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பாக நடிகை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரக்தியுடன் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இதனால் நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யனுக்கு இடையே பிரச்சனை உருவாகி இருக்குமோ என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது. என்றாலும் இந்த தகவல் குறித்த உண்மை நிலவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.