நாங்க இரண்டு பேர் இல்ல.. மூணு பேரு – சூப்பர் சர்ப்ரைஸ் தகவலை நல்ல நாளில் வெளியிட்ட ஆர்யன் ஷபானா!
செம்பருத்தி சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த ஷபானா, தன் கணவர் ஆர்யனுடன் சேர்ந்து ஒரு பதிவை நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார்.
ஆர்யன் ஷபானா:
ஜீ தமிழில் ஹிட் தொடராக டெலிகாஸ்ட் செய்யப்பட்ட தொடர் தான் செம்பருத்தி. இதில் நாயகியான ஷபானா குறுகிய காலத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். பின்னர் இவரும் சீரியல் நடிகர் ஆர்யனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை ஷபானா வீட்டினர் ஏற்றுக்கொள்ளவில்லை.. அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.. என பல செய்திகள் இணையத்தில் வெளியாகின.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் தொடர்ந்து மௌனம் காத்து வந்த ஆர்யன் ஷபானா நேற்று தீபாவளி அன்று சூப்பர் பதிவை வெளியிட்டுள்ளனர். அதுவும் யார் சொன்னார்கள் நாங்கள் தனி தனியாக தலை தீபாவளியை கொண்டாடுகிறோம் என்று என அந்த பதிவிற்கு இந்த தம்பதி தலைப்பிட்டுள்ளனர்.
ராபர்ட் மாஸ்டரை Uncle என அழைத்து நோகடித்த அவரின் ஒரே மகள் இவர் தானா – இதோ புகைப்படம்!
Exams Daily Mobile App Download
மேலும் அவர்களுடன் பிரபல நடிகர் MS பாஸ்கரும் உள்ளார். மேலும் ஷபானா எங்களுடன் எப்பொழுதும் இருப்பதற்கு நன்றி அப்பா என MS பாஸ்கர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் MS பாஸ்கர் ஆர்யன் ஷபானாவிற்கு இவ்வளவு பழக்கப்பட்ட நபரா என பார்க்கும் அனைவருக்கும் ஆச்சிரியம் தான். இந்த சூப்பர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.