கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம்

0
கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம்
கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம்

கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடிக்க நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கும் இந்த நீட் தேர்விற்கும் தொடர்பில்லாத நிலையில் மாணவர்களுக்கு இதுவே கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது..

தற்போது மத்திய அரசு அறிவித்து உள்ள புதிய கல்விக் கொள்கையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிக்கவும் தற்போது நுழைவுத்தேர்வு கட்டாயம் என அறிவித்து உள்ளது. இதனை தேசிய தேர்வு முகமை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு இந்த தேர்வு முடிவுகளை பயன்படுத்திக் கொள்வது பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு நுழைவுத்தேர்வு நடந்தால் அது உயர்கல்வி துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கருது தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடைபெறுவதில் மத்திய அரசின் பாடப்பிரிவில் படிப்போர் மட்டுமே அதிக அளவில் இடம் பெறுகின்றனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிப்போர் குறைவாகவே தேர்ச்சி பெறுகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு பயிற்சி மையங்கள் அதிகரித்து கல்வியில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதனை சரியாக பயன்படுத்துவோர் மட்டுமே தேர்ச்சிபெற்ற முடியும் என்றும் கருது தெரிவிக்கினறனர். எனவே வரும் கல்வியாண்டுகளில் இதன் தாக்கத்தினை பொறுத்து இருந்தே காண முடியும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!