கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் – முதல் பரிசு ரூ. 10,000!
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலை இலக்கிய போட்டிகள்:
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவரிடம் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மொழியை வளர்க்கும் விதமாகவும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பேச்சு, கவிதை கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக கலை இலக்கியப்போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போன்ற போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது மாவட்டத்திலுள்ள LRC மகளிர் கல்லூரியில் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த தேதிகளில் 3 ரயில்கள் ரத்து – பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த போட்டியில் பங்கேற்ற விரும்பும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை முழுமையாக பூர்த்தி செய்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000, 2ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.7,000, 3-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.