அண்ணா பல்கலை மாணவர்களுக்கு சிறப்பு அரியர் தேர்வு – அறிவிப்பு வெளியீடு!!
1990 ஆம் ஆண்டு முதல் பட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பை முடிக்காத அரியர் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகளை நடத்தி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரியர் தேர்வு:
அண்ணா பல்கலைக்கழகத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பல மாணவர்கள் அரியர் காரணமாக தங்களது பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதன்படி பட்டப்படிப்பை முடிக்காத அந்த அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒரு இறுதி வாய்ப்பை வழங்க உள்ளது. முன்னாள் மாணவர்கள் பலரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு 1990 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலையில் படித்து பட்டம் பெறாத அரியர் மாணவர்களுக்கு கடைசி 3 வாய்ப்புகளை கொடுக்க பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த சிறப்பு அரியர் தேர்வு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலும், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலுமாக மூன்று முறை நடத்தப்பட உள்ளது. பல ஆண்டுகளாக அரியர் காரணமாக பட்டம் பெற முடியாத இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த தேர்வுகளில் கலந்து கொண்டு இவ்வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது அரசாணை – சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு!!
தவிர மீண்டும் ஒருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி கோவை மாவட்டத்தில் உள்ள பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில் படித்து அரியர் காரணமாக பட்டம் பெற முடியாத மாணவர்கள் அவர்கள் படித்த கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவிர இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.