விஜய் டிவி “செல்லம்மா” சீரியலில் வெளியேறிய அர்னவ்.. அவருக்கு பதில் இவரா – அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவியில் புதிதாக தொடங்கி இருக்கும் “செல்லம்மா” சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் அர்னவை தற்போது சீரியலை விட்டு நீக்கி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் மாற்றம்:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் புதிய கன்டென்ட் உடன் தொடங்கப்பட்ட சீரியல் தான் செல்லம்மா. இந்த சீரியலில் நடிகர் அர்னவ் Lead ரோலில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா குறித்தும் சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அர்னவ் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை அடித்து துன்புறுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை செல்லம்மா சீரியலை விட்டு நீக்கி இருக்கின்றனர். மேலும் அவருக்கு தற்போது வரை பெயில் கிடைக்கவில்லை. அதனால் செல்லம்மா சீரியலில் யார் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் திலீப் செட்டி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதாவது அவர் எந்த தமிழ் சீரியலிலும் கமிட்டாகவில்லை எனவும், செல்லம்மா சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என விளக்கம் கொடுத்து இருக்கிறார். அப்போது செல்லம்மா சீரியலில் யார் நடிக்க இருக்கிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.