தமிழகத்தில் ஜூலை 25ம் தேதி ராணுவ ஆட்சேர்ப்பு நுழைவுத்தேர்வு – கலெக்டர் அறிவிப்பு!
திருவண்ணாமலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற ஜூலை 25ம் தேதி பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராணுவ பொது நுழைவுத்தேர்வு:
சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருவண்ணாமலையில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கடந்த பிப்ரவரி 10 முதல் தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய பகுதியிலுருந்து சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் மூலம் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்த முகாமில் அவர்களது கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டது. அதில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு பின் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ராணுவ பொது நுழைவுத்தேர்வு வருகிற ஜூலை 25ல் நடைபெறும் என்று தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. எனவே ராணுவ ஆள்சேர்ப்பு தேர்வாளர்கள் பொது நுழைவுத்தேர்வுக்கான புதிய அனுமதி அட்டைகளை, ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், புதைந்த ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009 என்ற முகவரியில் ஜூலை 1ம் தேதி அன்று பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது குறித்து ஏதேனும் விவரம் தேவைப்பட்டால் 044 25674294 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.