ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் ரூ.1,12,400 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் (AFT) சமீபத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. இதில் காலியாக உள்ள Private Secretary, Assistant, Upper Division Clerk போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
Exams Daily Mobile App Download
AFT வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில் (AFT) Private Secretary, Tribunal Officer/Section Officer, Assistant, Tribunal Master / Stenographer, Upper Division Clerk ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Parent Grade அல்லது Department களில் வழக்கமான முறையில் ஒத்த பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Private Secretary, Tribunal Officer / Section Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் Pay Matrix Level 7 படி குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
- Assistant, Tribunal Master / Stenographer பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் Pay Matrix Level 6 படி குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
- Upper Division Clerk பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் Pay Matrix Level 4 படி குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
AFT விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அதை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (31.05.2022) நிறைவடைவதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.