அரியர் தேர்வு ரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு – உயர்நீதி மன்றம் உத்தரவு!!!
கொரோனா காலத்தில் தமிழக அரசு அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்து அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை நீதிமன்றம் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
அரசு அறிவிப்பு:
கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரி தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்து அறிவிடத்தது. அதனுடன் அரியர் தேர்வுகளையும் சேர்த்து ரத்து செய்வதாகவும் அறிவித்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அரியர் தேர்வுக்கான மதிப்பீடுகள் வழங்கப்பட்டு விட்டது. இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட உள்ள துணை தேர்வுகளில் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!!
நீதிமன்ற வழக்கு:
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க தடை விதித்தது.தேர்வுகளை ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தீர்ப்பு:
பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் துணை தேர்வுகளில் 2,98,321 பேர் தேர்வுகளை எழுதியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை சார்பாக கோரிக்கை வைத்தது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்