8 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.10,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு பெண்களுக்கு முன்னுரிமை !
அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு , மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 31.12.2021 மாலை 5:45-ற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சமூக நலத்துறை |
பணியின் பெயர் | வழக்குப்பணியாளர்,பல்நோக்கு உதவியாளர் & பாதுகாவலர் |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிட விவரங்கள்:
- வழக்குப்பணியாளர் – 4
- பல்நோக்கு உதவியாளர் – 1
- பாதுகாவலர் -1
TN Job “FB Group” Join Now
வயது வரம்பு :
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி விவரங்கள் :
- வழக்குப்பணியாளர் – BSW & MSW டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- பல்நோக்கு உதவியாளர் – 8 வது தேர்ச்சி (௮) 10வது தேர்ச்சி/ தோல்வி
- பாதுகாவலர் – 8 வது தேர்ச்சி (௮) 10வது தேர்ச்சி/ தோல்வி
தகுதிகள்:
வழக்குப்பணியாளர் – 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் – -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும்,/சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
பாதுகாவலர் – நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
தொகுப்பு ஊதியம்:
- வழக்குப்பணியாளர் – ரூ.12,000 மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.3,000
- பல்நோக்கு உதவியாளர் – ரூ.6,400/-
- பாதுகாவலர் -ரூ.10,000/-
சிறந்த coaching centre – Join Now
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.12.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்
தரைத்தளம் அறை எண்:20,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
அரியலூர்-621704.