சென்னையில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு விவரம் இதோ!
சென்னையில் நாளை (செப்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின்னர் 2022ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையிலும் கடந்த வாரம் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அமலுக்கு வந்தது. ஆனாலும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான மானிய விலை மின்சாரம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவறாது மின் சார்ந்த பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் நாளை சென்னையில் நாளை (செப்.23) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பெரம்பூர் பகுதியில் சந்திரசேகரன் சாலை,பெரியார் நகர் 1,2,3,4 வது தெருக்கள், சந்திரசேகரன் சாலை, அதே போல தாம்பரம் பகுதியில் காயத்திரி நகர், பம்மல் அன்னை தெரசா தெரு, வினோபோஜி நகர்,மரியன் தெரு ராஜகீழ்பாக்கம் மாருதி நகர், ஈ.பி.காலனி, தென்றல் நகர், பாக்கியம் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடியாக உயர இருக்கும் ஆட்டோ கட்டணம்.. அதுவும் எவ்வளவு தெரியுமா? பயணிகள் அவதி!!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து பொன்னேரி பகுதியில் 33 கி.வோ. மத்சய நாயகி இரும்பு கம்பெனி, மாதர்பாக்கம் மாநெல்லூர், ராசசந்திராபுரம், மாதர்பாக்கம் மாநெல்லூர், ஈகுவார்பாளையம்,கண்ணம்பாக்கம், என்.எஸ்.நகர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்