தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) அன்று நடைபெறவிருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.
மின்தடை :
மின்சாரம் என்பது ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தமிழகத்தில் மின்சார துறையில் பல சீர்திருத்தங்களை சரி செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழக அரசானது மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இருக்கும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணிகளை செய்யும் போது ஊழியர்களுக்கும், மக்களுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்விநியோகத்தை தடை செய்து பணியை தொடருவார்கள். அவ்விதமாக நாளை மறுநாள் வியாழக்கிழமை கடலூர் மாவட்ட பண்ருட்டி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அங்குள்ள சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடையாகும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.
உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!
Exams Daily Mobile App Download
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
கடலூர்: பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்தி பாளையம் ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.