தமிழகத்தில் நாளை (ஜூலை 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 22) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
இந்தியாவில் நீர், காற்று, சூரிய சக்தி, அணு உலை, நிலக்கரி போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து வேலைகளும் டிஜிட்டல் முறையில் நடந்து வரும் நிலையில் மின் தேவை அதிகரித்துள்ளது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மொபைல் போன் முதல் ராக்கெட் உருவாக்குவது வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அளவிற்கு மின் உற்பத்தி இல்லை. இதனால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் சில நேரங்களில் சரியான மின்சாரம் மக்களுக்கு வழங்கும் நோக்கில் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தமிழகத்திலும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
அதனால் கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்கலம், மு. சிறுவனூா், சாத்தனக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேரளப்பூா், சிறுவாச்சி, தோ்போகி, குடிக்காடு, கொடூா், வெங்களூா், மன்னன்வயல், தாழையூா் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.