தமிழகத்தில் நாளை (ஜூலை 16) மின்தடை ஏற்படவுள்ள உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
பெரியகுளம் கோட்டம் மதுராபுரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று பெரியகுளம் கோட்டம் மின் செயற்பொறியாளர் ப.பால பூமி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
மின்தடை
தமிழகத்தில் உள்ள இன்றியமையாத துறைகளில் மிகவும் முக்கியமானது மின்சாரத்துறை ஆகும். மின்வாரியம் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் தமிழக அரசு மக்களுக்கு தரமான மின் சேவையை வழங்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு பல்வேறு காரணங்களால் மின்தடை ஏற்படுகிறது. அதனை கண்டறிந்து தமிழக அரசு மக்களுக்கு விரைவான சேவையை வழங்கி வருகிறது.
Exams Daily Mobile App Download
இதை தவிர மின்சார வாரியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதம் ஒருமுறை மின்தடை அறிவிக்கிறது. மேலும் மின் தடையின் போது மின்தடை செய்யப்படும் பகுதிகளில், மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அந்த சமயம் பணியில் ஈடுபடும் மின் ஊழியர்களுக்கு எந்த ஒரு இடையூறோ அல்லது உயிர் சேதமோ ஏற்படாத வகையில் மின் இணைப்பானது துண்டிக்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 16) மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் – முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் பெரியகுளம் கோட்டம் மதுராபுரி பகுதியில் உள்ள உபமின்நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அப்பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, ரத்தினம் நகர், அனுகிரக நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை(நாளை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளதாக பெரியகுளம் கோட்ட மின்பொறியாளர் ப.பால பூமி தெரிவித்துள்ளார்.