தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 22) பழனி, தேனியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை பழனி, தேனியில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை பழனி, தேனியில் உள்ள மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து பழனியில் பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி, தாழையூத்து, நாகூா்பிரிவு, மற்றும் சுக்கமநாயக்கன்பட்டி, கரடிகூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆக.22) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சகம் விளக்கம்!

Exams Daily Mobile App Download

இதே போல் தேனி மாவட்டத்திற்குட்பட்ட ராசிங்காபுரம் துணை மின் நிலையத்திலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆக.22) காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!