தேனியில் நாளை (செப்.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை தேனி மாவட்டம், வீரபாண்டி துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மின் ஊழியர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!
இதன் மூலம் மின் நிலையங்களில் உள்ள மின் சார்ந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு பயனர்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்பட்டு வருகிறது.
5 நாட்கள் அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவிகளுக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தின் மற்ற பகுதிகளை தொடர்ந்து தேனி மாவட்டம், வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தேனி மின்வாரிய செயற்பொறியாளர் கூறியுள்ளார்.