தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 26) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூலை 25) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயற்கை சீற்றங்களால் மின்சாரத்தால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுதல், மின் கசிவுகள் ஏற்படுதல், மின்கம்பங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மின் இணைப்பு கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் தீ பிடித்தல் போன்ற பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படக்கூடும். அதை சரி செய்யும் நோக்கத்துடன் அனைத்து பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. பராமரிப்பு நடைபெறும் பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. மின்தடை ஏற்படும் பகுதிகள் முன்னதாகவே மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை ஜூலை 26 மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளிலும்
தமிழகத்தில் வழக்கு தொடுப்பவர்களுக்கான எச்சரிக்கை – நீதிமன்றம் அறிவிப்பு!
மேலும் காயாமொழி, சீர்காட்சி, அருணாசலபுரம், கொம்புத்துறை, பேயன்விளை வடபகுதி,அய்யன்கோவில், இடையன்விளை, முதலூர், தோப்புளம், தருமபுரி, பன்னம்பாறை, கொம்பன்குளம், கட்டாரிமங்களம், அம்பலச்சேரி, ஞானராஜ்நகர், செம்பூர்,ஆதிநாதபுரம், காலனி, நங்கைமொழி, பூலிகுடியிருப்பு, ராமசுப்ரமணியபுரம், பூச்சிக்காடு பூவுடையார்புரம் ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.