தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் பகுதி துணை மின் நிலையத்தில் நாளை (19.07.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மின் தடை செயயப்படவுள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

நாட்டில் நீர், காற்று, சூரிய சக்தி, அணு உலை, நிலக்கரி போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் மின் உற்பத்தியும் வெகுவாக குறைந்து வருகிறது. அதே நேரம் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள கால நிலையில் ஒரு நிமிடம் கூட நம்மால் மின்விசிறி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மக்கள் எல்லா நேரங்களிலும் மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை எரித்த வண்ணம் உள்ளனர். இதற்கு மத்தியில் மின் வாரியம் தடையில்லா மின்சாரத்தை மக்களுக்கு வழங்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயனர்களுக்கு பாதுகாப்பான முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து வரும் 19ம் தேதி ( செவ்வாய் கிழமை ) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மடத்தூர் மெயின் ரோடு, சிப்காட் வளாகம், ராஜீவ் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், 3- வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, இந்திய உணவுக் கழக குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இ.பி. காலனி, டைமண்ட் காலனி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு வழக்கு – பெற்றோர்களுக்கு நீதிபதி அதிரடி கேள்வி!

மேலும் மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், சில்வர்புரம், சுப்பிரமணிய புரம், பாலையாபுரம், வி. எம்.எஸ் நகர், சுப்பிரமணிய புரம், பாலையாபுரம், வி. எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், பால்பாண்டி நகர், ஆசீர்வாத நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜர் நகர், என்.ஜி.ஓ. காலணி, சின்னக்கண்ணு புரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம், முருகேச நகர், அகில இந்திய வானொலி நிலையம், கதிர்வேல் நகர், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், அமுதா நகர், புஷ்பா நகர், கால்டுவெல் காலனி, செல்சீலி காலனி ஆகிய பகுதிகளில் ஜூலை 19ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!