தமிழகத்தில் நாளை (ஆக.30) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் மாதந்தோறும் சரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆக.30) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை
தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் இதனை பொதுமக்களுக்கு முறையாக அறிவித்து அதன்பின்பு செயல்படுத்தபடுகிறது.
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு – அட்டவணை வெளியீடு!
அந்த வகையில் நாளை (ஆக.30) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த பராமரிப்பு பணிக்காக துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி நாளை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மின்வாரிய செயற்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து குடவாசல் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்