தமிழகத்தில் நாளை (ஜூலை 29) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருவள்ளூரில் நாளை (ஜூலை 29) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
மின்தடை:
இந்தியாவில் கடந்த பதினைந்து வருடங்களாக தொழில் துறையில் மின் தேவை அதிகரித்து வருகிறது. இருப்பினும் இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை.
இதன் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன. இந்தியாவில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் மழை பெய்யும் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அணைக்கட்டுகளில் நீர் சேகரிக்க பட முடியாத நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
Post Office ல் மூத்த குடிமக்களுக்கான ஸ்பெஷல் திட்டம் – முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பல தரப்பு மக்களிடம் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் மாவட்டம் வாரியாக உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு தடையில்லா மின் சேவையை வழங்க முயற்சித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அத்தகைய மின் பராமரிப்பு பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த சமயம் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகளை சுற்றி மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை29) ஐ.வி.ஆர் பின்புறம், ராஜாஜி புறம், ஸ்ரீநிகேதன் பள்ளி, எஸ்.வி.கோயில் தெரு, காந்தி புரம், கணபதி நகர், தேவி மீனாட்சி நகர், மற்றும் என்.ஜி.ஓ காலனி ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.