தமிழகத்தில் நாளை (செப்.27) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதி வாரியான பட்டியல் குறித்த முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது நடப்பு மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி பலதரப்பினரும் கூறி வந்தனர். ஆனால், மின்வாரியத்தில் ஏற்படும் கூடுதல் செலவுகளை நிர்வகிக்க அரசுக்கு வருவாய் தேவைப்படுவதாகவும், மத்திய அரசு இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாதம் தோறும் தமிழகத்தில் பகுதி வாரியாக மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, முதலிபாளையம், பழவஞ்சிப்பாளையம், நல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை செப்டம்பர் 27ம் தேதி நடக்கிறது.
Exams Daily Mobile App Download
இதனால் மண்ணரை, பாரப்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காளிபாளையம், விஜயாபுரம், மானூர் செவந்தம்பாளையம், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யாவு நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்