தமிழகத்தில் நாளை (செப்.17) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (செப்.17) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.17) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப்.17) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்.17) திருநெல்வேலியில் தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் விவரங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை

தமிழகத்தில் மின் கம்பங்களில் உண்டாகும் பழுதுகளை உடனடியாக சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற மின்தடை கிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை திருநெல்வேலியில் தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! EMIயும் அதிகரிக்கும்!

இங்கு நெல்லை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ராமையன்பட்டியில் புதிதாக சூரிய மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக இங்கு மின் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இப்பணி காரணமாக இங்குள்ள தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை (செப்.17) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் வழக்கம் போல மின் விநியோகம் செய்யப்படும்.

Exams Daily Mobile App Download

மேலும் தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, நெல்லை தச்சநல்லூர் பெரிய அம்மன் கோவிலில் இருந்து தச்சநல்லூர் சந்திமரிச்சம்மன் கோவில் வரை இருக்கும் வீடுகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!