தூத்துக்குடியில் நாளை (ஜூலை 29) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தூத்துக்குடியில் நாளை (ஜூலை 29) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் நாளை (ஜூலை 29) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் நாளை (ஜூலை 29) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை 29) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களுக்கு காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மின்தடை என மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தகவல் தெரிவித்துள்ளார்.

மின்தடை:

தமிழகம் முழுவதுமே தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின் துண்டிப்பு என்பது அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. மேலும், மழைக்காலங்களில் தான் பெரும்பாலும் மின்கசிவு ஆகிய நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. அதாவது, மின்கசிவு ஏற்பட்டு சாலையில் தேங்கி கிடக்கும் நீரின் காரணமாக அறியாத விதமாக சில விபத்துகளும் ஏற்பட காரணமாகி விடுகின்றன. அதனால் இந்த விபத்துகளில் இருந்து மீள அவ்வப்போது அரசின் சார்பாக மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் முறையாக பழுது பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வது என்பது வழக்கமான ஒன்று. அதாவது பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக் கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெறும். இப்பணி நாளை (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது.

ITR கணக்கை தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 கடைசி நாள் – வருமானத்துறை அறிவிப்பு

எனவே கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் இளையரசனேந்தல் ரோடு, பைபாஸ் ரோடு, வி. எம். எஸ். நகர், சித்திரம் பட்டி ரோடு, மூப்பன் பட்டி காலனி, காந்திநகர், திலகர் நகர் ஆகிய பகுதிகளிலும்,

கோவில்பட்டி சிட்கோ உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் எட்டயபுரம் ரோடு பி.டி.ஓ ஆபீஸ் முதல் மந்திதோப்பு ரோடு வரை மற்றும் லெலில் நகர், பாரதி நகர், ஸ்ரீராம் நகர், ராமையா நகர் ஆகிய பகுதிகளிலும்,

விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் விஜயாபுரி ரோடு பகுதிகளிலும் ஜூலை 29 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!