கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் பகுதியில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்து வருகிறது. இதோடு காற்றும் வேகமாக வீசுவதால் பல மின்கம்பங்களில் மின்னிணைப்பு துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும், எதிர்பாராத விதமாக மின்கம்பங்களில் உள்ள வயர் அவிழ்ந்து மின்கசிவும் ஏற்படுகிறது. இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட காரணமாக அமைகிறது. இதனால் அவ்வப்போது மின்கம்பங்களில் ஏதேனும் பழுது இருக்கிறதா என சரிபார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் நெல்லை மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல் – ஆட்சியர் வேண்டுகோள்!
மேலும், அனைத்து பழுதுகளும் சரிபார்க்கப்பட்டு புதிய மின் கம்பிகளின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பணிகள் செய்ய இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால், மலைக்கோவிலூர் பகுதியை சுற்றியுள்ள பகுதி முழுவதும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் இதோ,
Exams Daily Mobile App Download
அதாவது, மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகப்பட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம், அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம்புதூர், வலையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய பகுதிகளில் நாளை காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கிராமிய மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.