சென்னையில் ஜூன் 21ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 21ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் குறிப்பிட்ட பகுதிகளில் சில மணிநேரம் தடை செய்யப்படும் என சென்னை மாவட்ட மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
தமிழகத்தில் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் சார்ந்த சாதனங்களை பராமரிப்பு செய்யும் பணி நடைபெறும். இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் முறையாக உள்ளதா என்பது கண்காணிக்கப்பட்டு, கோளாறுகள் இருப்பின் சரி செய்யப்பட்டு தடையில்லா மின் விநியோகம் உறுதி செய்யப்படும். கடத்த ஒரு வருட காலமாக தமிழக்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
அண்ணாமலை பல்கலையில் DDE மூலம் சட்டப்படிப்பு – தடை நீட்டிப்பு!
தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டமாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன் 17ம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இன்று சென்னையில் சைதாப்பேட்டை, போரூர், நீலாங்கரை, பாலவாக்கம், கிண்டி, கே கே நகர், அம்பத்தூர், சின்ன நீலா கரிகுப்பம், காந்திநகர், மணலி புதுநகர், அடையார் சாஸ்திரி நகர், வேளச்சேரி, எம்.ஜி.ஆர். நகர், ஐ.டி கோரிடர் போன்ற பகுதிகள் மேலும் இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து வரும் ஜூன் 21ம் தேதி ரவீந்தர் நகர், சோழன் நகர், கெரகம்பாக்கம், நியூ வெங்கடேஷ்வரா நகர், மனப்பாக்கம், சக்கரா நகர், காடுவெட்டி, பூந்தமல்லி, அலமாதி, அதிபெடு, குரவோயல், அரிக்கம்பேடு தாம்பரம், ரோஜா தோட்டம், மோகன் நகர், துரைசாமி நகர், வள்ளுவர் நகர், பஜனை கோயில் தெரு, பெருங்களத்தூர், அண்ணா மெயின் ரோடு, ஜே.ஜே நகர், வீராப்பா நகர், முத்துகுமாரப்பா தெரு மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.