தூத்துக்குடியில் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் கம்பங்களில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று மாதந்தோறும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனால் சில மணி நேரம் மின்தடை ஏற்படும். அந்த வகையில் மின் பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மின்சாரத் துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் இன்னும் 60 நாட்களில் செயல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்து மாவட்ட துணை மின் நிலையங்களிலும், மாதந்தோறும் ஏதாவது ஒரு நாளில், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.
Exams Daily Mobile App Download
அதற்காக, சம்பந்தப்பட்ட துணை மின் நிலையம் மூலம், மின்சாரம் விநியோகிக்கும் கிராமம், நகரங்களில், அன்று மின்தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, பீச் ரோடு, இனிகோநகர், வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம், சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, சந்தை ரோடு, வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, இஞ்ஞாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பு – இதற்காக தான்!
தொடர்ந்து முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின் விநியோகம் வழங்கப்படும்.