தூத்துக்குடியில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் நாளை (ஜூன் 18) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மரகிளைகள் வெட்டப்பட்டு மின் பாதை சரி செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பங்களில் பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மேலும் மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெறுகிறது.
Exams Daily Mobile App Download
மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. ஏதேனும் வயர்கள் இணைப்பு சரியாக இல்லாவிட்டால் அவை உடனடியாக சரி செய்யப்பட்டு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் மின் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை அறிந்து மின் பயனர்கள் முன் கூட்டியே மின் சார்ந்த பாதைகளை முடித்து விடுகின்றனர்.
தமிழக பள்ளிகளில் கட்டணம் நிர்ணயிக்க சிறப்பு அதிகாரி – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் ஒட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.