தமிழகத்தில் நாளை (ஜூன் 14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூன் 14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (ஜூன் 14) திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அங்குள்ள சில பகுதிகளிலும், கிராமங்களிலும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

மின்தடை:

சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின் தட்டுப்பாடு தான் காரணம் என்றும் அதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.

TN Job “FB  Group” Join Now

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்வினியோகம் பெரும் சுற்று வட்டார பகுதிகளான பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை தெற்கு வள்ளியூர் மற்றும் வள்ளியூர் டி.பி ரோடு, நம்பியான்விளை, ராஜாக்கமங்கலம், வாகைகுளம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், கோவனேரி, ஏ.எம்.ஆர்.எல். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு நாளை (ஜூன் 14) செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின் வினியோகம் இருக்காது என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் ராமராஜபுரம் மற்றும் லட்சுமணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 14ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான ராமராஜபுரம் மட்டபாறை, விளாம்பட்டி, பெருமாள்பட்டி, கருப்பட்டி, இரும்பாடி நாச்சிகுளம், பொம்மன்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தமிழக பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்? அரசின் திடீர் அறிவிப்பு!

அதே போலவே லட்சுமணம்பட்டி துணை நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் லட்சுமணம்பட்டி , சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!