தமிழகத்தில் நாளை (மே 17) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோடை காலம் தொடங்கிவிட்டால், மின்சார பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், ராசாத்தாவலசு, பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (மே 17) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் திமுக கட்சி, பதவியேற்று ஒரு வருடம் ஆகிய நிலையில் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதை உறுதி செய்யும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான விபத்துக்களை தவிர்ப்பதற்கு மின்வாரியம் கவனம் செலுத்தி இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின் தடை ஏற்படும். இந்த மின்தடை குறித்து முன்னதாகவே மின் செயற்பொறியாளருக்கு தெரிவிக்கப்படும்.இந்நிலையில் காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், ராசாத்தாவலசு, பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நாளை (மே 17) நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.
NEET தேர்விற்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு – தேர்வாணையம் அறிவிப்பு!
இந்த அறிவிப்பு அடிப்படையில், ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: வள்ளியரச்சல், வடுகபாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், கணபதிபாளையம், நல்லூா்பாளையம், பாப்பினி, எல்.ஜி.வலசு, பழையகோட்டை துணை மின் நிலையம்: குட்டப்பாளையம், ஊஞ்சமரம், மேட்டாங்காட்டுவலசு, மேலப்பாளையம், சித்தம்பலம், செல்லப்பம்பாளையம், காங்கயம் துணை மின் நிலையத்தில் உள்ள திருப்பூா் சாலை மற்றும் காடையூா் மின்மாற்றிக்கு உள்பட்ட திருப்பூா் சாலை, சிவன்மலை, வாய்க்கால்மேட்டுப்புதூா், நீலக்காட்டுப்புதூா், பங்களாபுதூா், கோவை சாலை, இல்லியம்புதூா், உடையாா் காலனி, லட்சுமி நகா், காந்தி நகா், அகஸ்திலிங்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.