தமிழகத்தில் நாளை (மே 16) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் வருகிற 16 ந் தேதி திங்கட்கிழமை அன்று காலை முதல் மதியம் வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் மோகன், வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
தமிழகத்தில் மே 20 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
அவ்விதமாக தமிழ்நாட்டில் காங்கேயம் கோட்டத்தில் உள்ள ஓலப்பாளையம், ராசாத்தாவலசு, சிவன்மலை, ஆலம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மே 16 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் திங்கட்கிழமை காலை 10 மணியில் தொடங்கி மதியம் 12 மணி வரை மின் விநியோகம் செய்யப்படும் என காங்கேயம் பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்:
ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள வீரசோழபுரம், மாடன் வலசு, பச்சாபாளையம், பாப்பினி பகுதிகளிலும்,
ராசாத்தாவலசு துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான எம்.ஜி.ஆா். நகர், அனுமந்தபுரம், சேமலை கவுண்டன் வலசு, முத்தூா் சாலையிலும்,
சிவன்மலை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள சாவடிப்பாளையம், படியூர், ராசாபாளையம், காரக்காட்டுப்புதூா், செல்லப்பம்பாளையம், ரெட்டிவலசு, செம்மங்குழிபாளையம், கணபதிபாளையம்.
மேலும், ஆலம்பாடி துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள ராசிபாளையம், மறவபாளையம், நால்ரோடு, சாவடி, திட்டம்பாளையம், செம்மங்குழிபாளையம் என மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.