தமிழகத்தில் நாளை (ஜூன் 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, திமுக அரசு மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில், சிவகாசியில் நாளை (ஜூன் 22) மின் பராமரிப்புப் பணி காரணமாக சில மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
நாடு முழுவதும், கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் பொதுமக்களின் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. மின்சார கேபிள்கள் வாயிலாக, டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டிகள் உதவியுடன் மின் வாரியம் மின் சப்ளை செய்து வருகிறது. சில சமயங்களில், போதிய அளவு மின்சாரம் கிடைத்தாலும் மின் பெட்டிகள் சேதம் காரணமாக சில இடங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த மின்தடை அறிவிப்பு பற்றிய தகவல் முன்னதாகவே உதவி செயற்பொறியாளருக்கு அறிவிக்கப்படும். மேலும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் இருக்கும். இந்த வகையில் சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின்நிலையத்தில் நாளை ( ஜூன் 22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆனையூா், விளாம்பட்டி, ஹவுசிங் போா்டு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, ஏ.துலுக்கபட்டி, போடி ரெட்டியபட்டி. இதேபோல், சிவகாசி சாட்சியாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சாட்சியாபுரம், ரிசா்வ் லைன், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, அய்யப்பன் காலனி, சசி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளர் பாபநாசம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.