தமிழகத்தில் நாளை (ஜன.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரை தனியாமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது.
இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மின் பயனர்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து மதுரை மாவட்டம் தனியாமங்கலம் துணை மின் நிலையத்தில் ஜன.28 அன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து? முதல்வர் முடிவு!
அதனால் தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயகம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையபட்டி, கரையிப்பட்டி,செம்மினிபட்டி, முத்துசாமி பட்டி, இ.மலம்பட்டி, கீழையூர், கீழவளவு, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூா், தா்மதானப்பட்டி ஆகிய பகுதிகளில் ஜன.28 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.