தமிழகத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடை ஏற்படுகிறது. இதன் விளைவாக நாளை (டிச.16) பழனியில் உள்ள சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஒவ்வொரு பகுதிகளிலும் ஏற்படுகிறது. எனில் ஒவ்வொரு நாளும் மின் கோளாறு மற்றும் மின் கசிவு காரணமாக ஏராளமான இடங்களில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாகவும் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் அநேக இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக மின்வாரியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – தேர்வு அறிவிப்பு வெளியீடு!!
அதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை அரசு முறையாக மேற்கொண்டு வருகிறது. இதனை அரசு முறையாக தேதி, நேரம் குறித்து அறிவித்து பின் செயல்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நாளை (டிச.16) வியாழக்கிழமை அன்று பழனியை அடுத்துள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு – மருத்துவத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!!
மேலும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் பழனியை அடுத்துள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, இராமபட்டினம்புதூா் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என பழனி மின்வாரிய செயற்பொறியாளர் கலைவேந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.