தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்புகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை (டிச.9) தூத்துக்குடியில் உள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் மின் தடை ஏற்படுகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்வதன் மூலம் பல்வேறு மின் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏற்படும் மின் கோளாறு மற்றும் மின் கசிவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. இதனால் அநேக இடங்களில் மின் இணைப்பு கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்துள்ளது.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – செய்திகளை குறிப்பிட்ட காலத்தில் மறைய வைக்கும் புதிய அப்டேட்!
அத்துடன் மின் கம்பங்களும் சாலைகளில் விழுந்துள்ளன. அதனால் இரவு நேரங்களில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை அரசு கண்காணித்து மாதந்தோறும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தான் மின் தடை ஒவ்வொரு பகுதிகளிலும் அறிவிக்கப்படுகிறது. இதனை அரசு முறையாக அறிவித்து அதன் பின் மின் தடை செயல்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.9) ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான அண்ணா நகர் 2, 3வது தெரு, சின்னமணி நகர், மில்லர்புரம், பர்மாகாலனி, பால்பாண்டி நகர், டி.எம்.பி. காலனி 5வது தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜவகர்முத்து அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.