தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள இடங்களில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை
தமிழகத்தில் தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் உலகத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பில் அறிவிக்கப் படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் புதுக்கடை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை – பதிவாளர் அறிவிப்பு!
இந்த நிலையில் புதுக்கடை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், முன்சிறை துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுக்கடை, ஆழாங்குளம், மாடன் கோவில், கைசூண்டி, வெள்ளையம்பலம், வேங்கோடு, வடக்கு வேங்கோடு ஆகிய பகுதிகளில் நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.