தமிழகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன்27) திங்கட்கிழமை அன்று செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், கீழக்கொல்லை மற்றும் திருக்கோவிலுார் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அதனை சுற்றி உள்ள வட்டாரங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்ற விவர பட்டியலை அம்மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின் தட்டுப்பாடு தான் காரணம் என்றும் அதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமாகி விட்டது.
TN Job “FB Group” Join Now
அவ்விதமாக நாளை ஜூன் 27ல் செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், கீழக்கொல்லை மற்றும் திருக்கோவிலுார் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அம்மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
செல்லங்குப்பம், வண்டிப்பாளையம் துணை மின் நிலையம்:
வசந்தராயன்பாளையம், மணவெளி, மதிமீனாட்சி நகர், புதுவண்டிப்பாளையம், பழைய வண்டிப்பாளையம், கண்ணகி நகர், அம்பேத்கார் நகர், வண்டிப்பாளையம் ரோடு, சிவா நகர், முத்தையா நகர், சரவணா நகர், மார்க்கெட் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, வெள்ளிமோட்டான் தெரு, தேரடித் தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
தீவிரமடையும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் – பேருந்துகள் நிறுத்தம்! பொதுமக்கள் அதிர்ச்சி!
கீழக்கொல்லை துணை மின் நிலையம் :
அப்பகுதியை சுற்றியுள்ள கீழக்கொல்லை, கொள்ளுக்காரன்குட்டை பகுதிக்கு காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்தடை ஏற்படும்.
மேலும், திருக்கோவிலுார் துணை மின் நிலையத்தில் இருந்து பிரியும் மீரா பீடர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வீரட்டகரம், கொளப்பாக்கம், முதலுார், எல்ராம்பட்டு, காட்டுக்காலனி, எடப்பாளையம், குன்னத்துார், கொடியூர், டி.கொணலவாடி, அருங்குறுக்கை, வில்லிவலம், வடமலையனுார், கொரக்கந்தாங்கல் பகுதிகளுக்கும் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை ஏற்படும்.