தமிழகத்தில் ஜூன் 26 ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை செய்யப்படும் என்று மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் போதும், ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளாலும் அவ்வப்போது மின் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பணியின் போது மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது. இந்த மின்தடை குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மக்கள் வேலைகளை திட்டமிடுகின்றனர். மற்ற பகுதியை தொடர்ந்து நாளை (ஜூன் 26) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலந்தலை, கல்லாமொழி, சண்முகபுரம், வெள்ளாளன்விளை, தண்டுபத்து, ரத்தினபுரி, எல்.எஸ்.ரோடு, மேல பள்ளி தெரு, கீரனூர், தலைவன்வடலி, நாலுமாவடி, காளிநகர், கட்டையன்விளை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து விஷயத்தில் கண்ணம்மாவை ஏமாற்றிய பாரதி – சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
அதே போல காமராஜ் நகர், சுப்பராயர்புரம், பள்ளிவாசல் பத்து, கட்டாரிமங்கலம், வாலசுப்பிரமணியபுரம், வரதராஜபுரம், கட்டையன் புதூர், இலங்கநாதபுரம், அனைத்தலை, அடைக்கலாபுரம் (மெஞ்ஞானபுரம்), குலசைரோடு, திசையன்விளை ரோடு, படுக்கப்பத்து, தட்டார்மடம் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.