தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஜூன் 10 மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

மின்தடை:

தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது மின் ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் தடையில்லா மின் விநியோகம் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்பட்டு மின் பாதைகள் சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகளும் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் ஸ்டாலின் காலனி, எட்டையபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு முத்து மாரியம்மன் கோவில், மந்தித்தோப்பு ரோடு, வக்கீல் தெரு, மங்கலம், மேல மங்கலம், குப்பனாபுரம், சன்னது புதுக்குடி ஆகிய பகுதிகளில் ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல விஜயபுரி உப மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செமப்புதூர், கசவன்குன்று, ஈராடச்சி, கருங்காலி பட்டி, சிதம்பராபுரம், விஜயாபுரி, கொடுக்காம் பாறை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து விளாத்திகுளம் உப மின் நிலையத்தின் மூலம் மின் வினியோகம் பெறும் சங்கரலிங்கபுரம், கழுகாசலபுரம் ,எம். துரைசாமிபுரம் உபமின்நிலையத்தின் மூலம் மினிவினியோகம் பெறும் கோபாலபுரம், காலாங்கரை பட்டி, சங்கரலிங்கபுரம், கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளுக்கும், வள்ளிநாயகபுரம், வேலாயுதபுரம், கூழைத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஜூன் 10ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!