தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
உலக நாடுகளை பொறுத்த வரையில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த பராமரிப்பு பணிகளுக்கான காரணங்களாக, மின் கம்பிகளை சரி செய்வது மற்றும் வயர்களின் மேல் அங்கங்கே உயரமாக வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவது போன்றவை ஆகும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏப்ரல் 20 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக முன்னே தங்களது வேலைகளை செய்து முடித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபல சீரியல் நாயகனை கரம் பிடித்த செய்தி வாசிப்பாளர் கண்மணி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள், தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அம்மாவட்ட மக்கள் தங்களின் வேலைகளை பின்னரே முடித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.