மதுரையில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் நிலையங்களில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் மதுரையில் சுப்ரமணியபுரம் துணை மின்நிலையம், மாகாளிப்பட்டி துணை மின்நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை உள்ளிட்ட இடங்களில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை இப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் நாள்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு பிரச்சனை காரணமாக எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் மதுரையில் சுப்பிரமணியபுரம் துணை மின்நிலையம், டி.பி.கே.ரோடு பீடர், மாகாளிப்பட்டி துணை மின்நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை உள்ளிட்ட அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் மேற்கொண்ட துணை மின் நிலையங்களில் மின்சாரம் பெறும் பகுதிகளான டி.பி.கே. ரோடு, கிரைம்பிராஞ்ச், முகமதியர் தெரு, கிளாஸ்கார தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்லமுத்து ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளியம்மன் கோவில் தெரு, கீரைத்துறை பகுதிகள், மேலத்தோப்பு, காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, மேல கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி உள்ளிட்ட இடங்களில் நாளை (ஜூன் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் உயரழுத்த மின்பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான கூடல்மலைத் தெரு, பாம்பன் நகர், கிரீன் நகர், திருமலையூர், என்ஜினீயரிங் கல்லூரி, ஜி.எஸ்.டி.ரோடு, சன்னதி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!