காஞ்சிபுரத்தில் ஜன.4ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மின் தடை
ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளுக்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மின் இணைப்புகளில் ஏற்படும் பிளவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின்தடை ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இதனை மின்வாரிய செயற்பொறியாளர் ஒவ்வொரு மாதமும் அறிவித்து வருகிறார். பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருவதால் மின் விபத்துகள் ஏற்படுவதை எளிதாகவே தடுக்க முடியும்.
ஜனவரி 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது மின் வாரியம் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் 4ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், கே.வி.வேளியூர் துணை மின் நிலையங்களைச் சேர்ந்த கிராமங்களிலும் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்