சென்னையில் நாளை (ஜூன் 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) அன்று அம்பத்தூர் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியது அவசியமான ஒன்று. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு துணை மின் நிலையங்களில் விபத்துக்கள் நேரிடும். அவற்றை தவிர்ப்பதற்காக மாதம் ஒரு முறை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நாளை (ஜூன் 21) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
இவ்வாறு மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பராமரிப்பது மிக முக்கியம் என்பதால் இப்பணியின் போது சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்விதமாக நாளை ஜூன் 21ல் சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய அம்பத்தூா் தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான பட்டரவாக்கம், பிள்ளையார் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்குப் பகுதி, பஜனை கோயில் தெரு, பிராமணர் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, கச்சனம் குப்பம், ரயில் நிலையம் சாலை, பால் பண்ணை சாலை, டாஸ் ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.