சென்னையில் நாளை (ஜூலை 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
நாளை சென்னையில் சில பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி சென்னையில் நாளைய மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
மின்தடை
தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின்நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் நாளை சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சென்னையில் நாளை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அம்பத்தூர், பெரம்பூர், மாதாவரம், எண்ணூர், வியாசர்பாடி, கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இதனை தொடர்ந்து அண்ணாசாலை பகுதியை சுற்றியுள்ள பகுதிகளான தம்புசெட்டி தெரு ஒரு பகுதி, லிங்கி செட்டி தெரு ஒரு பகுதி, அங்கப்பன் தெரு ஒரு பகுதி, இராஜா அண்ணாமலை மன்றம், ஸ்டிரிங்கர் தெரு பகுதி, எஸ்பிளனெட் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.