சென்னையில் திங்கட்கிழமை (ஜூன் 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
சென்னையில் திங்கட்கிழமை (ஜூன் 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் திங்கட்கிழமை (ஜூன் 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் திங்கட்கிழமை (ஜூன் 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சென்னை கே.கே நகர் துணை மின் நிலையத்தில் ஜூன் 13ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.எனவே மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் பயனர்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளருக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும்.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15 இல் பள்ளிகள் திறப்பு – ஜூலை 15 வரை ஆய்வு நடத்த திட்டம்!

மற்ற மாவட்டத்தை தொடர்ந்து ஜூன் 13ம் தேதி சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மயிலாப்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், சோழிங்கநல்லூர், அடையாறு, சைதாப்பேட்டை. கிண்டி, போரூர், கே.கே நகர், மயிலாப்பூர் பகுதி: சி.பி. ராமசாமி ரோடு, மகாலட்சுமி நகர் புதுதாங்கல் சிடிஓ காலனி, தங்கமணி நகர், பாலாஜி நகர் மாடம்பாக்கம் விஜிபி சீனிவாச நகர் ஐ.டி காரிடர், சோழிங்கநல்லூர் பகுதி: கே.கே சாலை, வில்லேஜ் நெடுஞ்சாலை, டிஎன்எச்பி சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடையார், சைதப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கிண்டி பகுதி, ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டி.ஜி நகர், புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். போரூர் பகுதி : கோவூர் குமரன் நகர் முழுவதும், மணிகண்டன் நகர், ரெட்டி தெரு திருமுடிவாக்கம் எருமையூர், கிருஷேர் பகுதி, கிஷ்கிந்தா மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். கே.கே.நகர் : வடபழனி, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், சாலிக்கிராமம், அசோக் நகர், அழகிரி நகர், கே.கே.நகர் பகுதி, எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளிலும் வரும் 13ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!