நாளை (ஜூன் 22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆலம்பட்டி, படர்ந்தபுளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை புதன்கிழமை ஜூன் 22 ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளன.
மின்தடை அறிவிப்பு
நம் தாத்தா பாட்டி காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகம் தேவைப்படாமல் இருந்தது. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் பெரிய பெரிய நிறுவனங்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் மின்சாரத்தின் தேவை சற்று குறைவாக இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில் பெரிய பெரிய நிறுவனங்கள் வந்து விட்டன. இந்த நிறுவனங்களை இயக்குவதற்கு மின்சாரமே முக்கிய இயக்கு தூண்டு கோலாக பயன்படுகிறது. ஆதலால் இந்தியா முழுவதும் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி, தமிழகத்தில் இருக்கும் மின் நிலையங்களில் உள்ள மின் சாதனைகளில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கிறதா, பழுது அடைந்துள்ளதா, மின் வயர்கள் மரக்கிளைகளுடன் உரசி கொண்டிருக்கிறதா என்று மாதம் ஓரு முறை மின்தடை செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், கோவில்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ராமலிங்கபுரம் மற்றும்,
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் சொன்ன தகவல்!
ஆலம்பட்டி, படர்ந்தபுளி, தோணுகால், முத்துசாமிபுரம் பகுதிகளுக்கும், விளாத்திகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சங்கரலிங்கபுரம் பகுதிகளுக்கும்,எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, கம்மாபட்டி பகுதிகளுக்கும், நாளை ஜூன் 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.