நாளை (ஏப்ரல் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிங்காபுரம் மின் நிலையங்களில் ஏப்ரல் 8 நாளை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – சாதாரண ரயில் விரைவு ரயிலாக மாற்றம்!
மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் மற்றும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும். இந்நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நாளை வெள்ளிக்கிழமை அன்று மின் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9 மணியில் தொடங்கி மதியம் 2 மணி வரையிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – சாதாரண ரயில் விரைவு ரயிலாக மாற்றம்!
அதன்படி, கபிலர்மலை, சிறு கிணத்துப் பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்க நத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், சின்னமருதூர், பாகம் பாளையம், பெரியசோளிபாளையம், சின்ன சோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ். கொந்தளம், பொன்மலர் பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று கபிலர்மலை துணை மின்நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.