நாளை ஜூன் 28ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் வெளியீடு!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் நாளை (ஜூன் 28) திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு இருப்பதாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது. அரசு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கிலும், மின்சார விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளவும் மாதந்தோறும் மின்விநியோகம் குறிப்பட்ட நாளில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. அந்த வகையில் மாவட்டந்தோறும் குறிப்பிட்ட நாளில் மின்தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பும் முன் கூட்டியே வெளியிடப்படுகின்றது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடங்குளம், பழவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை ( ஜூன் 28) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வள்ளியூர் மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் பேரும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம்,
தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!
விஜயாபதி, திருவம்பலாபுரம், ஆவரைகுளம், அம்பலவாணபுரம், பழவூர், யாக்கோபுரம், சிதம்பரபுரம் மற்றும் அதன் அருகே இருக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வள்ளியூர் மின்விநியோக செயற்பொறியாளர் வளனரசு, பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா ஆகியோர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் முன் கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.