திருப்பூரில் நாளை (ஜூன் 25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவனூர் புதூர் துணை மின் நிலையம் மற்றும் பாலப்பம்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை சனிக்கிழமை ஜூன் 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் தடை செய்யப்பட்டு மின் இணைப்பு துண்டிப்பு, மின் கசிவு போன்றவை சரி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மின் கம்பிகள் மாற்றுதல், வீதிகளில் இருக்கும் மின் கம்பிகளில் உள்ள வயர்களை மாற்றுதல், மின் விநியோகத்திற்கு தடையாக இருப்பவைகளை கண்டறிந்து நீக்குதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை தூய்மைப்படுத்தல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது செய்யப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
மேலும் மின் இணைப்புகளை சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகின்றன. இது குறித்து அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் கூட்டியே தெரிவித்திருக்கின்றன.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு போட்டியாளர் – குஷியில் ரசிகர்கள்!
அதன்படி தேவனூர் புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்லப்பம்பாளையம், கரையாம்பாளையம், நல்லூர், பொன்ணாண்டக்கவுண்டனுார் மற்றும் தொண்டாமுத்துார் பகுதிகள் மற்றும் பாலப்பம்பட்டி துணை மின்நிலையதிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தொட்டினுார் பீடர், காந்திநகர், ரத்தினபுரி, ஐஸ்வர்யா நகர் ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்திருக்கிறார்.