திருப்பூர் மாவட்டத்தில் நாளை (டிச.30) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் திருப்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை வியாழக்கிழமை டிசம்பர் 30 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருப்பூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் கொ. தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார் .
நாளை மின்தடை:
தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வழக்கமாக நடைபெறும். துணை மின் நிலையங்களில் மின் கசிவு மற்றும் மின்பிளவு காரணமாக விபத்துக்கள் நடைபெறுவதால் அதனை தடுப்பதற்காக மின்வாரியம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணி மேற்கொள்வதன் பயனாக, மின் நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகள் தவிர்க்கப்படும்.
திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!
இதன் அடிப்படையில் பராமரிப்பு பணி மின் நிலையங்களில் நடைபெறும் போது மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த மின் தடை குறித்து அம்மாவட்ட மின் வாரியம் முன்னதாகவே துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளருக்கு அறிவிப்பு அளித்து விடுவார்கள். இந்த வகையில் திருப்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (வியாழக்கிழமை) டிசம்பர் 30 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என்று திருப்பூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் கொ .தி.சந்திரசேகரன் அறிவித்துள்ளார் .
பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHEL) 30+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: 71,040/-
மின் தடை ஏற்படும் பகுதிகள் அவிநாசி சாலை , புஷ்பா சாலை, கல்லூரி சாலை , ஓடக்காடு , பங்களா பேருந்து நிறுத்தம் , காவேரி வீதி ,ஸ்டேன்ஸ் வீதி ,ஹவுசிங் யூனிட் ,முத்து சாமி வீதி விரிவு, கே.ர்.இ .லே .அவுட், எஸ் ஆர் நகர் வடக்கு ,நேதாஜி வீட்டிஹி ,குமரன் வீதி ,பாத்திமா நகர் , டெலிபோன் காலனி ,வித்யா நகர் , எம்.ஜி.ஆர் நகர் , பாரதி நகர் ,வளையங்காடு ,மாஸ்கோ நகர் ,காமாட்சிபுரம் ,பூத்தார் திரையரங்கம் ,சாமுண்டிபுரம் , லட்சுமி திரையரங்கம் பகுதி ,கல்லம்பாளையம் , எஸ் .ஏ.பி திரையரங்கம் , ஆஷர் நகர் ,நாராயணசாமி நகர் ,காந்தி நகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி , சாமிநாதபுரம், பத்மாவதிபுரம் , அண்ணா காலனி ,ஜீவா காலனி , வேளாண் நகர், மற்றும் அங்கேரிபாளையம் ஆகும்.